Tuesday, May 18, 2021

மறக்கவும் மாட்டோம் மாறவும் மாட்டோம் !



தாயை இழந்து பார் தாய்மை தெரியும்! 
தாய் மண்ணை இழந்து பார் மண்ணின் அருமை தெரியும்!

 

கொண்டு குவித்த நாளை கொண்டாடும் சின்ஹல அரசே!!??? 
இறந்தவருக்கு  நினைவுகூற கூட எங்களுக்கு உரிமை இல்லையா?!    

 

தங்கள் சொந்த நாடுக்குள்ளே இறந்தவருக்கு நினைவு கூற முடியாதா ஒரு இனம் என்றால் அது எம் ஈழத்தமிழினம்!!


- எழுத்தில் மட்டும் பேச முடிந்த ஈழத்து பெண் 🖊- 


 


 

Wednesday, June 3, 2020

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!

  


கன்பூசியஸ் என்ற சிந்தனையாளன் சீனத்தில் தோன்றி தத்துவம் உதிர்ந்தான்.

தத்துவ ஞானி

சாக்ரடீஸ் கிரேக்கத்தில் பிறந்து வாழ்வியல் பாடங்களை மாணவர்களுக்கு நடத்தினான்.

புத்தன் வடக்கில் தோன்றி புத்த மதம் தோன்றிவித்து போதனை செய்தான்.

அந்த காலகட்டத்தில் தொல்காப்பியன் நம் மண்ணில் நடமாடி நம் வாழ்வியல் நாதமான

நம் தமிழ் மொழிக்கு இலக்கியம் வகுத்து இலக்கினம் படைத்தான்.

மேலே கூறிய தத்துவ ஞானிகள் யாவரும் வாழ்வியல் நெறி கூறிய அதே சமயம் நம் தொல்காப்பியன் ஒரு மொழிக்கு இலக்கனம் வகுத்தான் என்றால் தமிழ் மொழி எவ்வளவு பழையது.

எவ்வளவு தொன்மையானது. தமிழன் எப்போது தோன்றினான், தமிழ் நாகரீகம் எப்போது தோன்றியது, தமிழ் மொழி எப்போது பிறந்தது? இரண்டாயிரத்து ஐநூறு வருடம் முன்பே ஒரு மொழிக்கு இலக்கணம் ஒருவன் எழுதினால் என்றால் எவ்வளவு காலம் முன்னமே தமிழ் வழக்கத்தில் இருந்திருக்க வேண்டும். தமிழர்கள் நாகரீகத்தில் எத்துனை பழமை வாய்ந்தவர்களாக, பண்பட்டவர்களாக இருதிருக்க வேண்டும்.


சல்லடையாக சலித்து,சலித்து

அறிஞர் பெருமக்கள்

கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

உலகில் ஆறு மொழியே மிக தொன்மையான மொழி என்று.

அவை கிரேக்கம், லத்தின், ஹீப்ரூ, சீனம், சமஸ்கிருதம், தமிழ்.


கிரேக்க மொழி மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

லித்தினும் எப்போதோ பழக்கத்தில் இல்லாமல் போக , ஹீப்ரூவில் தான் முதன் முதலில் விவிலியம் எழுதினார்கள். இப்போது அந்த மொழியை புதுபித்து கொண்டு இருக்கிறார்கள். சீனம் வட வடிவம் எழுத்துக்களால் ஆனதால் அது கற்பதற்கு மிகவும் கடினம், சமஸ்கிருதம் எழுத்து மொழியே தவிர பேச்சு மொழியாக எங்கும் காணபடவில்லை. இதில் இலக்கியம் இருக்கலாம். தொன்மை இருக்கலாம். ஆனால்

தமிழ் மொழி மட்டுமே இன்றளவும் பேச்சு மொழியாகவும், எழுத்து வடிவமாகவும், பாமரன் முதல் படித்தவன் வரை, காலம்காலமாக கொஞ்சமும் இளமை மாறாமல் உலகம் முழுவதும் கிட்டதட்ட பத்து கோடி மேற்பட்ட மக்களால் பேசபடுகிறது. கொண்டாடபடுகிறது.


இவ்வுலம் எப்படி தோன்றியது.

ஆண்டவன் இவ்வுலகை படைத்தான்.

ஆண்டவன் படைத்தான் என்றால் அவன் முதன் முதலில் எதை படைத்தான். எவ்வாறு படைத்தான்.

இப்படி பல கேள்விகள் எழுத்தான் செய்கிறது.

ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள்.

சூரிய குழம்பில் இருந்து ஒரு சிறிய பகுதி கிழ் நோக்கி விழ , அதன் மேல் பல லட்சம் ஆண்டுகள் மழை பொழிய, விழுந்த குழம்பு குளிர்ந்து பாறையாக மாறி அந்த பாறை வெள்ளத்தில் அடித்து செல்ல, பின் சிறு, சிறு கற்களாக உடைய, அதுவே பின் கரைந்து மண்ணாக மாறியது. அதுவே பூமியாக மாறுகிறது.

அப்போது, தமிழ் எப்போது தோன்றியது.

புரிகிறதா!

கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி மட்டும் அல்ல மூத்த மொழி தமிழ். ஆதி மொழி தமிழ்.

தமிழ் வாழ்க, தமிழ் வளர்க.

Friday, November 1, 2019

கவலைகள் பலவிதம்

 






Exam ல் fail விட்டவனுக்கு pass பண்ணமுடியல்லையே எண்ட கவலை
passcபண்ணி C- எடுதவணுக்கு A+ கிடைக்கவில்லை எண்ட கவலை



எனக்கோ எதை யாரும் வாசிப்பாங்களோ எண்ட கவலை
வாசிச்சவனுக்கு ஏண்ட இதை வாசிச்சம் எண்ட கவலை

Tuesday, April 2, 2019

இசை மேல் கொண்ட காதல் !!!




                                              கோடை வெயில் கொளுத்தும் போதும்

மாலை மழையில் நனையும் போதும்

தாலாட்டுப் பாடல் பாடும் போதும்

இறங்காட் பாக்கள் பாடும் போதும்

தென்றலாய் காற்று தீண்டும் போதும்

புயலாய் மாறி வீசும் போதும்

மகிழ்ச்சியில் மனம் திளைக்கும் போதும்

துயரத்தில் உள்ளம் துன்புறும் போதும்

காலையில் கண் விழிக்கும் போதும்

இரவில் உரங்கப் போகும் போதும்

கனவில் கூட தொடரும் ஒன்று

நினைவில் நல்ல இனிமை என்று

" இசையை காதல் செய் "

Tuesday, January 26, 2016

சூர்யா சாருக்கு நன்றி - பசங்க 2 விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பின்பு உங்களை சந்திகுறேன், முதலில் நம்ம சூர்யா சாருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன், எனொண்ட பதிவை விட்டு பிரிந்து இருந்த என்னையே தம்பி நீ பதிவு எழுதணும் எண்டு துண்டி விட்டவர் நம்ம பசங்க ஹீரோ சூர்யா. :) 



நாம என்னண்ட நாம உண்டு நம்ம பாடு உண்டு எண்டு எல்லா நல்ல/மொக்கு படத்தை பாத்து சந்தோசமா இருந்தமைய, எப்ப பசங்க2 பாதமோ அண்ணைக்கு தொடங்கிசைய இந்த மன அழுத்தம் எப்பேபட்டவது  இந்த பதிவை போட்டுடனும் எண்டு.

பசங்க ஒண்ணை பாத்து குலுங்கி குலுங்கி சிரிச்ச இந்த சிங்கத்தை "நீங்களும் வெல்லாம் ஒரு கோடி, ஆர் யு ரெடி" எண்டு சொல்லி சொல்லியே சாய்சுபுட்டாரு நம்ம ஹீரோ. ஒரே வர்தைஜில சொல்லன்னுமேண்ட, சிறுசுக சுட்டி புன்னகைக்குள் ஒரு வேற்று கிரகவாசி கொலைவெறி. 

நண்பர்களே இந்த பதிவு எல்லாம் ஒரு காமெடிக்கு தான், யாரும் சீரிஸ்சா  எடுத்துகாதிங்க. :P


Monday, December 23, 2013

என்றென்றும் புன்னகை - புன்னகைக்குள்ளும் ஒரு கண்ணீர் உண்டு

நீண்ட  இடைவேளைக்கு பிறகு ஒரு பதிவு. எல்லாம் இந்த தலைவா பார்த்த எபக்ட் தான், வழமையா நாமா தான் கிறுக்கல் பதிவு எழுதி மத்தவங்களுக்கு கிறுக்கு பிடிக்க வைக்குறது , அனால்  நம்ம தளபதி சிம்பிள நம்மளையே பால்ட் ஆக்கி கீள்பக்கத்துக்கு அனுப்பிடரைய :P
சரி நாம் வந்த வேலையை பாப்பம்.


என்றென்றும் புன்னகை என் பார்வையில் ...
என்னை அறியாமல் என் கண்களை நனைத்த,
அப்பா மகன் பாசம் - எம் மகன்
நண்பர்கள் பாசம் - நண்பன் 
காதலர்கள் பாசம் - அப்படீன்னா ;)
அனால் இந்த மூன்றையும் கலந்து என்ன மட்டும் இல்லது  என் பக்கத்தில் இருந்த இரும்பு சிங்கத்தையே கரைய வைசுடாங்க இந்த என்றென்றும் புன்னகை பசங்க :)

Monday, May 6, 2013

சூது கவ்வும் நகைச்சுவையின் பரிமாணங்கள்

தமிழ் சினிமாவின் நகைச்சுவை பரிமாணங்கள் 
அன்னை வயிற்றில் நடிப்பின் மூலம் என்னை சிரிக்க வைத்தவர் நாகேஷ் 
தவழும் வயதில் "அண்ணே அண்ணே" சொல்லி சிரிக்க வைத்தவர்கள் கௌண்டமணி செந்தில்
"வேணாம்.. வலிக்குது... அழுதுடுவேன்!" என்று சொல்லி வளரும் வயதில் சிரிக்க வைத்தவர் வடிவேலு 
அரும்ம்பு மீசை வளரும் வயதில் இரட்டை அர்த்தம் புரிய வைத்து சிரிக்க வைத்தவர் சந்தானம் 

ஆனால் காலம் பல கடந்துடுச்சு, நாலு கழுதை வயசாச்சும் ஆயிடுச்சு.. புதுசா ஒன்னும் தமிழ் சினிமாவில காணல்ல என்ற ஏக்கத்தை தணிக்க வந்தவங்க தான் இந்த குறும்பட இருக்குனர் சிகரங்கள், 

நாளைய இயக்குனர் ஆரம்பித்த காலத்தில் இருந்து நான் இவர்களின் பரம ரசிகன் அதிலும் நலன் குமாரசாமியின் ஒவ்வொரு குறும் படத்தின் ஒவ்வொரு  கட்சியும் நகைச்சுவை சொல்லும். 

சூது கவ்வும் முன்றே வரியில் 
  • நடிகர்கள் மட்டும் அல்ல ஒவ்வொரு கட்சிகளும் நகைச்சுவை பேசலாம் என்று  புரிய வைக்கின்ற  படம்,
  • பழைய இசைக்கு இப்படியும் புது வடிவம் கொடுக்கலாம் என்று புரிய வைக்கின்ற  படம்,
  • ஒவ்வொரு ரசிகர்களின் அழுகைக்கு பின் சிரித்து மருந்து கொடுக்கலாம் என்று  புரிய வைக்கின்ற  படம்,

நாளைய இயக்குனரில் இருந்து நலன் குமாரசாமியின் ஒரு குறும்படம்