Thursday, September 22, 2011

நற் சிந்தனைகள் . . .





உலகில் அனைத்துமே நல்லதாகத்தான் இருக்கிறது. ஆனால், அதைப்பார்ப்பவர்களின் கோணத்தில்தான் அதில் வேறுபாடு தெரிகிறது.
-தாயுமானவர்-
உங்களுடைய குற்றங்குறைகளைக் கண்டுபிடியுங்கள். அடுத்தவர்களிடம் குணங்களை மட்டும் தேடுங்கள். அவர்களது குறைகளை பெரிதுபடுத்துதல் பாவமாகும்.
-சத்யசாய் -

நம்மைப் பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று எண்ணுகிறோமோ, அதே போல் நாம் பிறரையும் நடத்த வேண்டும்.

-காந்திஜி -

ஒருவன் தன் சிநேகிதனுக்காக தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும், அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை.

-பைபிள் -

ஆயிரம் வீண்வார்த்தைகளைப் பேசுவதைக் காட்டிலும், இதம் தரும் அன்பான ஒரு வார்த்தை மேலானது.

-புத்தர்-

வந்தான் கொ(வொ)ன்றான்



ஜீவாவின் சமீப கால வெற்றிகள் கண்ணனின் கண்டேன் காதலின் உண்ர்வும் புடைசூழ‌ சில நண்பர்க்ளுடன் ரொம்ப எதிர்பார்ப்புடன் திரை அரங்ககுக்கு இறங்கினான் இந்த நொந்துபோனவன் ... 

திரை அரங்கின் வாசலிலேயே முதல்லவது அதிர்ச்சி,
டிச்கெட்க்காக 150ஐ நீட்ட தம்பி 250 தாங்க என்டார் counter சரி நம்ம ஜீவா படதுக்கு 250 என்ன 1000 கூட குடுக்கல்லம் என்டு சந்தோசம உள்ளுக்கு போன 

இரண்டாவது அதிர்ச்சி,
நம்மையும் சேர்த்து மொத்தமா 10 பேர் தான், சரி பரவாயில்லை வந்தனாங்க கொஞசம் காத்தோட்டம படதை பாப்பம் என்டு இருந்துட்டு கண்ணமூடிக்கண்ண திறந்து பாக்கிற‌ன் படம் முடிசுட்டு என்டு எல்லாரும் போராங்க. என்னடா இது என்டு குழப்பி கொண்டு வெழியாலவர ஒருதன் சொல்லுறான்,

"மச்சான் இந்த situationசனிலும் கொறட்டை விட்டு நித்திரை கொள்ளுறியே நீ ரொம்ப கொடுது வைச்சவண்ட" எண்டான் . . . . .

என்ன செய்ய எல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

Friday, March 11, 2011

வீடு விட்டு விடுதி வந்தேன் . . .



பலகை படுக்கைய்யோ பாடிக்கு மெத்தையானது
தாழ்ப்பாழ் இல்லாத கழிவறையே சொர்க்கமானது
தரை இருக்கைகளோ இன்ப இருக்கைகளானது
குளிப்பறைகளோ பிறந்த மேனியை பப்பிளிக்காக்கியது

வாங்கி வைத்த நொருக்கு தினியோ மாயமாய் மறைந்தது
அடுத்தவன் பொருள் எல்லாம் என் பொருளாகியது
ஒரு துளி பேஸ்டும் ஒஇலும் தினசரி கடனானது
இல்லை எனற சொல்லோ காற்றோடு கலைந்து போனது 

நெஸ்ரமோல்டோ நெசசரி பானமானது
பராட்டாவும் பருப்பும் பகல் உணவானது
பஞ்சாமிர்தமோ டெயிலி டெசேட் ஆனது
உழுந்து வடையோ ஆட்டம்மா வடையானது

சிற்றுண்டிச்சாலை கொம்மியூனிட்டி சாலையானது
நண்பர்க்ளுடனான அரட்டை இன்பமானது
அதில் சிலரின் வதையோ  துன்பமானது
நட்புடை சூழ உண்ணும் உணவு அமிர்தமானது

விடுதி வாழ்க்கை இன்பமானது மட்டுமல்ல
அது ஒரு வாழ்க்கையையின் படிப்பிடமும் கூட‌ . . .

அஜித் 


Monday, January 17, 2011

பெண் கைதி . . .


ஒரு பெண்ணின் உளம் பேசுகிறது அவள‌து இதயத்திற்காக‌ . . .

பேருந்தில் என் அருகில் அமர்ந்துகொள் ஆனால்
என்னை ஓரதில் வைத்து பூட்டும் பூட்டாகிவிடாதே

என் கரங்ளை இறுகப் பறறிக்கொள் அதற்காய்
என் கைகளிற்கு விலங்கிட்டு என்னை நடைபிணமாக்காதே

தினமும் ஆயிரம் ஆயிரம் அன்பு வார்தைகள் கூறு அனால்
இலவச அழைப்பு என்று இருழும்வரை இம்சை செய்யாதே


இறுதியாக ஒன்று கேட்கிறேன் . .
நீ எனை காத்துக்கொள்வாய‌ ஒரு ________ , ஒரு கைதியாக அல்லாமல் . . .


பொதுஇடத்தில் இருந்து,
மதுமகன்.