Wednesday, December 15, 2010

எமனின் மகள்

உன் அழகு கண்டு என் இதயம் அலையுதடி அனால்
உன் உள் அழகு கண்டு இதயம் அழுகுதடி

உன் புன்னகை கண்டு உள்ளம் பூரிக்குதடி ஆனால்
புன்னகையின் பொருள் கண்டு உள்ளம் புண்ணாய் போகுதடி

உன் குரல் கேட்டு என் செவிகள் இசை பாடுதடி அனால்
மெய்யற்ற சொல் கேட்டு செவிகள் செவிடாகுதடி

உன் இதள் காண்டு என் இதள்கள் சினுங்குதடி அனால்
துளி சிந்தும் இரை கண்டு என் இதள்கள் அழுகுதடி

உன் நிழலில் என் உருவம் நிழல் ஆறுமடி அனால்
உரு மாறிப்போகும் என் உரு காண‌ உளம் மறுக்குதடி

இறுதியாய் உனை ஒன்று கேட்கிறேன் பெண்ணே
நீ பிரமனின் வீட்டில் பிறந்த எமனின் மகளா !!


கனவிலிருந்து,
அஜித்

2 comments:

  1. ஆகா அஜித் ;-)

    //கனவிலிருந்து,
    அஜித்//

    எழும்பு மச்சான், விடிஞ்சிட்டுது :)

    ReplyDelete